சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நடிகை ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள தெலுங்கு படம் 'மை நேம் இஸ் ஸ்ருதி'. ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கி உள்ளார். முரளி சர்மா, ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி உள்ளது.
ஹன்சிகா கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தியதால் தெலுங்கு படம் பற்றி கவனிக்கவில்லை. அங்கிருந்தும் எனக்கான ஸ்கிரிப்டும் வரவில்லை என்பதும் உண்மை. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொன்னதும் நடிக்க பயந்தேன். மனிதர்களை கடத்தி அவர்களின் தோலை வியாபாரம் செய்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. எனது தாய் அடிப்படையில் மருத்துவர் என்பதால் அவர் அது உண்மைதான். அது இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார். அதன் பிறகே நடித்தேன்.
படத்தில் நான் ஒரு விளம்பர ஏஜென்சி நடத்தும் பெண். சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த கடத்தல் கும்பலிடம் சிக்கி விடுகிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறேன். அந்த கும்பலை எப்படி சமூகத்துக்கு அடையாளம் காட்டுகிறேன் என்பதுதான் படத்தின் கதை. எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. அது ஹீரோக்கள் போடும் சண்டை போன்று இருக்காது. என் வயது கொண்ட எனது வலிமை கொண்ட ஒரு பெண் எப்படி சண்டையிடுவாளோ அதுபோன்று யதார்த்தமாக இருக்கும். என்றார்.