பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என நடிகர் விஜய்யை வைத்து வெற்றி படங்களை இயக்கினார். சமீபத்தில் பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி அங்கும் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அஜித்தை வைத்து படம் இயக்குவது குறித்து அட்லி கூறியதாவது, "ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாரா உதவியுடன் அஜித்திற்கு முதலில் கதை சொல்ல முயன்றேன். அப்போது நான் பள்ளி மாணவன் போல் உள்ளதாக அஜித் என்னை கிண்டல் செய்தார் எனவும், அஜித்துக்காக ஒரு பயங்கரமான கதை இருப்பதாகவும், அஜித் ஓகே சொன்ன உடனேயே அந்த படத்தை எடுக்க நான் தயார்" என பகிர்ந்துள்ளார்.