புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171-வது படத்தில் நடிக்கப் போகிறார். அதோடு ஜெயிலர் படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ரஜினி. முன்னதாக ரஜினியின் பேரன்களான யாத்ரா, லிங்கா இருவரும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.