லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
வளர்ந்து வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர். அப்புச்சி கிராமம், உரியடி, குற்றம் 23, சங்கிலி புங்கிலி கதவதிற, ரங்கூன் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவர் இசை அமைத்த 'சித்தா' படத்தின் பின்னணி இசை பேசப்பட்டு வருகிறது. ஏராளமான தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
திரைப்படங்களுக்கு இசை அமைத்தாலும் தொடர்ந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது ஆடியோ புத்தகம் ஒன்றுக்கு இசை அமைக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது “ஆப் மூலம் ஆடியோ புத்தகங்களை வெளியிட்டு வரும் குக்கு எப்எம் நிறுவனம், பொன்னியின் செல்வன் காலத்துக்கு முன்பு சோழ தேசத்தை ஆண்ட அரசன் கரிகாலன் பற்றி ஆராய்ச்சி செய்து ஒருவர் எழுதிய கதையை 9 எபிசோடுகளாக, ஆடியோ புத்தக வடிவில் உருவாக்குகிறது. இதை கண்களை மூடிக்கொண்டு கேட்டால், திரைப்படம் பார்ப்பது போல் உணர வைக்கும். இதற்கு நான் இசை அமைக்கிறேன். தமிழில் இது புதிய முயற்சி” என்றார்.