அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. லியோ வெற்றி விழாவில் இதனை விஜய் சூசகமாக தெரிவித்து விட்டார். இதனால் இதுகுறித்து திரைப்பட நட்சத்திரங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: சினிமா நல்ல விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது, கெட்ட விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. நிறைய நல்ல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறது. உதாரணமாக, 'ஜெய்பீம்' படத்தால் பழங்குடி மக்களுக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. விஜய் அரசியலுக்கு வருதற்கான வேலைகளைச் செய்து வருகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாருக்கும் அரசியலுக்கு வருதற்கான உரிமையிருக்கிறது. ஆனால், அதற்கு முன் அவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அதன் பிறகு அரசியலுக்கு வரவேண்டும். விஜய்யும் முதலில் களத்தில் இறங்கி வேலை செய்தபிறகு அரசியலுக்கு வரவேண்டும். என்றார்.