புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இயக்குனர் அட்லீ கடந்த 10 ஆண்டுகளில் தமிழில் நான்கு படங்களையும் ஹிந்தியில் சமீபத்தில் வெளியான ஜவான் என்கிற படத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இவற்றில் தமிழில் தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனராகவே மாறிவிட்டார். இதன் பயனாகத்தான் அவருக்கு பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூலிக்கும் அளவுக்கு அந்தப் படத்தையும் வெற்றி படமாக்கி விட்டார் அட்லீ.
ஜவான் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில் தனது மனைவியுடன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருக்கும் ராஜகோபாலசாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார் அட்லீ. அதைத்தொடர்ந்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள வேலுக்குடி என்கிற கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வம் கோயிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார் அட்லீ. ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நேர்த்திக்கடனாக அவர் இந்த வழிபாட்டை நடத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.