டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் | 50 கோடிக்கு பேரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி |
‛மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்' என தொடர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக உள்ளார். மீண்டும் விஜய்யை வைத்து இவர் இயக்கிய ‛லியோ' படம் 19ம் தேதி திரைக்கு வந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சிறப்பாக உள்ளது. கடந்த நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலை எட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தயாரிப்பு தரப்பு இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில், ‛லியோ படம் மக்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி. அதேசமயம் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. அது என்னவென்று ஆராய்ந்து அடுத்த படத்தில் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வேன். அடுத்து ரஜினி சாரின் படம் இயக்க உள்ளேன். இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கும்'' என்றார்.