வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை(அக்., 19) 5 மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸாகிறது. இந்த படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு படக்குழுவினர் தமிழக அரசை நாடியது. ஆனால் அரசு மறுத்துவிட்டது. 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம். ஆனால் காலை காட்சி 9 மணிக்கு தான் ஆரம்பிக்கணும் என அறிவித்தது.
ஆனால், தயாரிப்பு தரப்போ விடாப்பிடியாக லியோவிற்கு எப்படியாவது காலை காட்சி பெற்று விட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது காலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது. வேண்டுமானால் 9 மணி காட்சியை 7 மணிக்கு துவங்கலாம். ஆனால் அதையும் அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு லியோ தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இன்று அரசு சார்பில் உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்ட உத்தரவில், 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அரசாணை வெளியிட்டபடி 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.