என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சின்னத்திரை, பெரிய திரை நடிகர் ஈ.வி.கணேஷ் பாபு நடித்து, இயக்கி உள்ள படம் 'கட்டில்'. சிருஷ்டி டாங்கே நாயகியாக நடித்துள்ளார், விதார்த், கன்னிகா சினேகன், கீதா கைலாசம், செம்மலர் அன்னம், உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லெனின் திரைக்கதை எழுதி, எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
இந்த படம் தயாராகி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சில விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் படம் நவம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஈ.வி.கணேஷ் பாபு கூறியதாவது: ஒரு கட்டில் 3 தலைமுறைகளை தாண்டி எப்படி பயணிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. நமது பழமையையும், கலாசாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிற படம். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். அவர்தான் எனது குறும்படத்திற்கும் இசை அமைத்தார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே பல விருதுகளை வென்றுள்ள படம். இந்த படத்தில் நடித்தவர்கள் இப்போது பிசியான நடிகர்களாகி விட்டார்கள். கட்டில் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.