இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் முதல் முறையாக இயக்கி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்துடன் தமிழில் 'இந்தியன் 2' படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்திற்காக கமல்ஹாசன் டப்பிங்கை ஆரம்பித்துவிட்டார் என்று படக்குழுவினர் வீடியோ வெளியிட்டார்கள். அந்த வீடியோவில் ஷங்கரும் உடனிருந்தார். இது பற்றி தெலுங்கு மீடியாக்கள் தவறான செய்தியை வெளியிட ஆரம்பித்தார்கள். 'இந்தியன் 2' டப்பிங்கில் ஷங்கர் இருந்தால், 'கேம் சேஞ்சர்' படத்தை தற்போது யார் இயக்கி வருகிறார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஷங்கர். “ஹைதராபாத்தில் நேற்று முதல் எங்களது 'கேம் சேஞ்சர்' படத்திற்காக உணர்ச்சிபூர்வமான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு அப்பா மறைந்ததை அடுத்து நேற்று அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அந்த சூழலிலும் நேற்றிரவு படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்து வதந்தி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.