டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. அவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் மீரா சில நாட்களுக்கு முன்பு மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து விஜய் ஆண்டனி குடும்பம் மீளமுடியாமல் தவிக்கிறது. அண்மையில் நடந்த 'ரத்தம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்குகூட தனது இளைய மகள் லாராவுடன் வந்தார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவியும், தயாரிப்பாளருமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் “ எங்களுடன் நீ 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை என் அருகில் மட்டும்தான் வைத்திருப்பேன். அந்த சூரியனையும், நிலவையும் கூட உனக்குக் காட்டியிருக்க மாட்டேன். நான் தினமும் உன் நினைவால் இறந்து கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அம்மா, அப்பாவிடம் திரும்பி வா. லாரா (தங்கை) உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். லவ் யூ தங்கம்” என பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவு படிப்பவர்களை கலங்கை வைக்கிறது.




