டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவின் 90ஸ் ரசிகர்களுக்கு மிக பிரபலமானவர். தற்போது தனுஷின் 51வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் தற்போது தனது 99வது படமான நா சாமி ரங்கா எனும் படத்தில் நடித்து வருகிறார் நாகார்ஜூனா.
இந்த நிலையில் தனது 100வது படத்திற்கான கதை கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தமிழில் மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன், நாகார்ஜூனாவை சந்தித்து கதை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இதற்கான இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது .