புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ருத்ரன் படம் தோல்வி அடைந்தது. சந்திரமுகி 2 சுமாரான வெற்றியை பெற்றது.
தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது, " பழைய கதைகள் இனி வேலைக்கு ஆகாது. கொரோனா காலத்திற்கு பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை இயக்குனர்கள் லோகேஷ், நெல்சன் ஆகியோர் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. திரைக்கதை மற்றும் சண்டை காட்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் . நானும் இந்த புதிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளேன். இதற்கு பதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.