ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
சினிமா பின்னணி பாடகியான சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து பொறுப்பான தாயாக மாறியுள்ளார். இந்நிலையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளபதிவில், ‛‛குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த நபர் எங்கள் காரின் மீது மோதிவிட்டார். காரின் இடது பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த எனது குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோல் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டும் நபரின் கைகளை உடைக்க வேண்டும் என்றும் கோபமாக பதிவிட்டு, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள்'' என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.