பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், நாடக நடிகர் என இருந்த சின்னி ஜெயந்த், 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பன், அண்ணன், காமெடியன், குணசித்ரம் என ஏராளமான படங்களில் நடித்தார். உனக்காக மட்டும், கானல் நீர், நீயே என் காதலி படங்களை இயக்கினார். இதில் கானல் நீர் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்தார். தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு 'பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
காந்தாரா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்திரஜா இந்த படத்தை இயக்குகிறார். மூன்றரை வயது குழந்தையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதில் டிரைவராக சின்னி ஜெயந்த் நடிக்கிறார். அவரது நண்பன் கதாபாத்திரத்தில் வையாபுரி நடிக்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது ஒரு டாக்ஸி டிரைவருக்கும், அவருக்கு கிடைத்த ஒரு 3 வயது குழந்தைக்குமான அன்பை சொல்லும் படமாக உருவாகிறது.