ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
'பேட்ட, மாஸ்டர், ஜகமே தந்திரம்' படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சரித்திரப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் மாளவிகா நடித்துள்ளார்.
நேற்று டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த மாளவிகாவிடம், 'தங்கலான்' படம் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, “தங்கலான்' இதுவரையில் மிகவும் சவாலான ஒன்று. எனது வாழ்க்கையில் இப்படி ஒரு உத்வேகத்தை எனக்குள் பார்த்ததில்லை. இக்கதாபாத்திரம், எனது நடிப்பு உங்களுக்கு நிஜமாக பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வளவு அர்த்தம் உள்ளது,” என்று பதிலளித்துள்ளார்.
'தங்கலான்' படம் தமிழில் தனக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என பெரிதும் நம்புகிறார் மாளாவிகா. 2024 பொங்கல் வெளியீடாக 'தங்கலான்' வரும் எனத் தெரிகிறது.