துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பேட்ட, மாஸ்டர், ஜகமே தந்திரம்' படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சரித்திரப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் மாளவிகா நடித்துள்ளார்.
நேற்று டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த மாளவிகாவிடம், 'தங்கலான்' படம் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, “தங்கலான்' இதுவரையில் மிகவும் சவாலான ஒன்று. எனது வாழ்க்கையில் இப்படி ஒரு உத்வேகத்தை எனக்குள் பார்த்ததில்லை. இக்கதாபாத்திரம், எனது நடிப்பு உங்களுக்கு நிஜமாக பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வளவு அர்த்தம் உள்ளது,” என்று பதிலளித்துள்ளார்.
'தங்கலான்' படம் தமிழில் தனக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என பெரிதும் நம்புகிறார் மாளாவிகா. 2024 பொங்கல் வெளியீடாக 'தங்கலான்' வரும் எனத் தெரிகிறது.