காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் தங்கலான். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்திற்கும் இந்த படம் முதல் நாளில் 26.44 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் கூறுகையில், ‛‛தங்கலான் படத்தை 100 பாகங்கள் கூட எடுக்க முடியும். உங்களுக்கு இந்த படம் பிடித்திருப்பதால் நீங்கள் காட்டும் அன்புக்காக இரண்டாம் பாகத்தை உருவாக்க நாங்கள் ஆசைப்படுகிறோம். இது பற்றி இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோரிடத்தில் கலந்து பேசி உள்ளேன். ரஞ்சித் தனது அடுத்த படவேலைகளை முடித்துவிட்டு தங்கலான்-2 படத்தில் நடிக்க அழைத்தால் உடனே சென்று விடுவேன்,'' என்று கூறியுள்ளார் விக்ரம். இதன் மூலம் தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.