ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் தங்கலான். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்திற்கும் இந்த படம் முதல் நாளில் 26.44 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் கூறுகையில், ‛‛தங்கலான் படத்தை 100 பாகங்கள் கூட எடுக்க முடியும். உங்களுக்கு இந்த படம் பிடித்திருப்பதால் நீங்கள் காட்டும் அன்புக்காக இரண்டாம் பாகத்தை உருவாக்க நாங்கள் ஆசைப்படுகிறோம். இது பற்றி இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோரிடத்தில் கலந்து பேசி உள்ளேன். ரஞ்சித் தனது அடுத்த படவேலைகளை முடித்துவிட்டு தங்கலான்-2 படத்தில் நடிக்க அழைத்தால் உடனே சென்று விடுவேன்,'' என்று கூறியுள்ளார் விக்ரம். இதன் மூலம் தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.