14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் |
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்பட்ட ஏஆர் ரஹ்மானின் இமேஜை கடந்த வாரம் அவர் சென்னையில் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.
பல்லாயிரம் பேர் இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழையக் கூட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடந்தது என்றெல்லாம் கூட குற்றச்சாட்டுகள் எழுந்தது. கடந்த வாரம் முழுவதும் டிவிக்களில் விவாதம் நடத்தும் வரை அந்த இசை நிகழ்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கடும் விமர்சனங்கள் எழுந்த பின் ஏஆர் ரஹ்மான் அவரது டுவிட்டர் தளத்தில் டிக்கெட்டுகளின் காப்பியையும், அவர்கள் குறைகளையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதன்பின் ரஹ்மான் தரப்பிலிருந்து 4000 பேருக்குக் கட்டணத் தொகையைத் திருப்பி அனுப்புவதாக செய்திகள் வெளிவந்தன. பல சினிமா பிரபலங்களும் ரஹ்மானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்தோ, பணம் திருப்பித் தரப்படுவது குறித்தோ சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் ரஹ்மான் பதிவிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு அப்டேட் தரும் ரஹ்மான் கடந்த ஒரு வார காலமாக அமைதி காத்து வருகிறார்.