கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ப்ரியங்கா நல்காரி, அந்த சீரியல் முடிந்த பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் நடித்து வந்தார். ஆனால், சீரியல் தொடங்கி சில மாதங்களில் தனது காதலர் ராகுலை திடிரென ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன்காரணமாக சில நாட்களிலேயே சீரியலை விட்டும் விலகினார். இதனால் ரசிகர்கள் பலரும் ப்ரியங்கா இனி நடிக்கவே வரமாட்டாரா? என வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அண்மையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தெலுங்கு கம்பேக் என ஹேஷ்டேக் போட்டிருந்தார். தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள நளதமயந்தி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த பூஜையில் ப்ரியங்கா நல்காரியும் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். இந்த தொடரில் ப்ரியங்காவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்கிறார்.