புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இந்தியத் திரையுலகத்தில் இரண்டு 1000 கோடி படங்களைக் கொடுத்த இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றவர் ராஜமவுலி. அவருடைய படங்களைப் பார்த்து மற்றவர்கள் பாராட்டுவதைப் போல அவரும் மற்ற படங்களைப் பார்த்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருப்பவர்.
நேற்று, 'பேக் டூ பேக்' இரண்டு படங்களைப் பார்த்து அது பற்றிய தன்னுடைய பாராட்டுக்களைப் பதிவிட்டுள்ளார். “நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு படங்களைப் பார்த்தேன். ஸ்வீட்டி எப்போதும் போல அழகாகவும், பொலிவாகவும் இருக்கிறார். நவீன் பொலிஷெட்டி நிறைய சிரிப்பையும், வேடிக்கையையும் வழங்கினார். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி குழுவிற்கு வாழ்த்துகள். இவ்வளவு உணர்ச்சிகரமான விஷயத்தை மிகவும் வேடிக்கையாகக் கையாண்ட உங்களுக்குப் பாராட்டுக்கள், மகேஷ்,” என படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
அடுத்து 'ஜவான்' குழுவினரைப் பாராட்டி, “பாக்ஸ் ஆபீஸின் பாட்ஷா' ஷாரூக் என்பதற்கு இதுவே காரணம்.. இந்த பூமியை உலுக்கிய ஒரு ஓபனிங். வடக்கிலும் வெற்றிப் பயணத்தைத் தொடர இயக்குனர் அட்லீக்கு வாழ்த்துகள், அபார வெற்றி பெற்றதற்காக 'ஜவான்' குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜமவுலியின் பாராட்டால் இரண்டு படங்களுக்கும் இன்னும் கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.