பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
தமிழ் சினிமாவில் சில முக்கிய படங்களின் வெளியீட்டுத் தேதிகளை கடைசி நிமிடத்தில் திடீர் திடீரென மாற்றி வருகிறார்கள். வரும் வாரம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாவதாக இருந்த 'சந்திரமுகி 2' படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28ம் தேதிக்குத் தள்ளி வைத்துவிட்டார்கள். செப்டம்பர் 28ம் தேதியன்று “இறைவன், ரத்தம், பார்க்கிங், சித்தா,' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் அந்தப் போட்டியில் தற்போது 'சந்திரமுகி 2' படமும் இணைகிறது.
இந்நிலையில் பெரிய கம்பெனிகளின் படங்களை இப்படி திடீரென மாற்றுவது குறித்து 'ரத்தம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். “தமிழ் சினிமாவின் மற்றுமொரு வேதனை என்னவென்றால், பெரிய கம்பெனிகளில் இருந்து வரும் பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதியை அப்படியே மாற்றுவது, தள்ளி வைக்கப்பட்ட வாரத்தில் வெளியாகும் படங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
செப்டம்பர் 28ம் தேதி ஐந்து புதிய படங்கள், மற்ற மொழிப் படங்கள் என ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுப்பார்கள். பெரிய படங்களின் ரிலீஸ் தேதியை கடைபிடிக்கும் ஒழுக்கம் எங்கே ?. ரசிகர்களைப் பெற சவால்களை சந்திக்கும், சிறிய படங்கள் மற்றும் நடுத்தரத் திரைப்படங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களை செய்வது பரவாயில்லை. ஆனால், பெரிய படங்கள் இப்படி செய்வது, மிகவும் ஏமாற்றமளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகத்தில் படங்களின் வெளியீட்டில் எந்த ஒரு வரைமுறையையும் தயாரிப்பாளர்கள் கடைபிடிப்பதில்லை. ஒரு காலத்தில் தயாரிப்பாளர் சங்கங்களில் இது பற்றி பேசி ஒரு முடிவெடுப்பார்கள். ஆனால், இப்போது இரண்டு தயாரிப்பாளர் சங்கங்கள் இருந்தும் பட வெளியீடுகள் தாறுமாறாக நடந்து வருகின்றன. இந்த வாரத்தில் கூட 6 நேரடி தமிழ்ப் படங்கள், 2 டப்பிங் படங்கள் வெளிவந்துள்ளன. பட வெளியீட்டில் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் முறையை யார் கொண்டு வரப் போகிறார்கள் ?.