பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் படங்கள் புறக்கணிக்பபட்டிருப்பதாக கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இத தொடர்பாக பலரும் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக சூர்யா தயாரித்து, நடித்த 'ஜெய்பீம்' படத்திற்கு விருதுகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இயக்குனர் வெற்றி மாறனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: தேசிய விருதுகளை பொறுத்தவரை அதில் எனக்கு தனிப்பட்ட கருத்து உள்ளது. ஒரு படத்தை குறிப்பிட்ட விருதுக்காக அனுப்பும் போது, 'அந்த தேர்வுக்குழுவின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்' என்ற ஒப்புதலோடு தான் தேர்வுக்கு அனுப்புகிறோம். எனவே விருது கிடைப்பதும், கிடைக்காததும் அந்த தேர்வுக்குழுவின் முடிவு. அதே போல், ஒரு தேர்வுக்குழுவின் முடிவு எந்த படத்தின் தரத்தையும், சமூக பங்களிப்பையும் தீர்மானிப்பதில்லை.
குறிப்பாக 'ஜெய்பீம்' படம் வந்த பிறகு குறிப்பிட்ட அந்த சமூகத்தினரின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த படத்தை தொடங்கியதற்கான நோக்கம் நிறைவேறிவிட்டது. விருது கிடைத்திருந்தால் அது அந்த படக்குழுவிற்கு கூடுதல் சிறப்பைக் கொடுத்திருக்கும். எனவே ஒரு படத்தின் தரத்தை தேர்வுக்குழு முடிவு தீர்மானிக்க முடியாது என்பது எனது கருத்து. அதே போல தேர்வு குழுவின் முடிவிற்கு கட்டுப்படுவதாக கூறி படத்தை அனுப்பிவிட்டு அதன்பிறகு விருது குறித்து விமர்சிப்பதிலும் உடன்பாடில்லை. தேர்வு குழுவில் நம்பிக்கை இல்லாவிட்டால் படங்களை விருதுக்கு அனுப்ப கூடாது.
இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.