சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாள சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். மம்முட்டியின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் வெளியிடும் பதிவு கவனிக்கத்தக்கதாக இருக்கும். அந்த வரிசையில் நேற்று அவர் தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாக பரவியது.
அவர் தனது வாழ்த்து பதிவில் “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன் முறையாக கேமரா முன்னால் நின்றபோது உங்களைப் போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன். தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதாவது என் வாழ்நாளில் நீங்கள் படைத் சாதனைகளில் பாதியையாவது நான் படைத்து விடுவேன் என்கிற பொருள்படும்படியான இந்த பதிவு துல்கர் தந்தை மீது கொண்டிருக்கும் அன்பு. தன் மீது கொண்டிருக்கும் தன்னம்பிக்கை இவற்றை குறிப்பதாக பலரும் துல்கரை பாராட்டி வருகிறார்கள். இந்த பதிவுடன் தந்தையுடன் நிற்கும் கருப்பு வெள்ளை படத்தையும் துல்கர் வெளியிட்டுள்ளார்.