வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் நயன்தாரா சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். படங்களில் நடிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், அதனை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வந்தார். அவருக்கு பதிலாக அவரது கணவர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.
தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். இன்ஸ்டாகிராமின் முதல் பதிவாக தனது இரட்டை குழந்தைகளின் முகத்தை வெளிஉலகத்திற்கு பகிர்ந்திருந்தார். இது வைரலானது. இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் சாதனைப் படைத்துள்ளார். கணக்குத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பத்துலட்சம் பாலோயர்கள் அவரை பின் தொடரத் தொடங்கியுள்ளனர். இவ்வளவு விரைவாக அதிக பாலோயர்களை கொண்ட நடிகை நயன்தாராதான். இதற்கு முன், நடிகை கேத்ரினா கைபுக்கு 10 லட்சம் பாலோயர்கள் 24 மணி நேரத்தில் கிடைத்தது சாதனை அளவாக இருந்தது.