ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா. அதைவிட இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார் என்கிற செய்திகளுக்காகவே இன்னும் பிரபலமானவர். கடந்த 2013ல் நடைபெற்ற மிஸ் இந்தியா எர்த் அழகிப்போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற இவர் அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார். அந்த அழகிப்போட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின்.
அப்போது இறுதிச்சுற்றில் சோபிதாவிடம் அசின் கேள்வி கேட்கும்போது, “கல்லூரிகளில் மாணவிகள் இப்படித்தான் உடை அணிந்து வரவேண்டும் என அரசாங்கமோ கல்லூரி நிர்வாகமோ நிர்பந்தப்படுத்தினால் உங்களது பதில் என்னவாக இருக்கும்” என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சோபிதா, “ மாணவிகள் உடை அணியும் விஷயத்தில் கல்லூரி நிர்வாகமும் அரசாங்கமும் தலையிடக்கூடாது. இந்த விஷயத்தில் அவர்கள் கலாச்சார காவலர்களாக தங்களை மாற்றிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதில் அளித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் திடீரென வைரலாக பரவி வருகிறது.