விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு |
வேகமாக வளர்ந்த வந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்து புகழ் பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு, மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைவு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலை வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வீட்டை அவரது உறவினர்கள் வாடகைக்கு விட முயற்சி செய்தனர். ஆனால் யாரும் அந்த வீட்டில் குடியேறத் தயங்கினர். விலைக்கு வாங்கிக் கொள்ளவும் யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் பாலிவுட் நடிகை அடா சர்மா அந்த வீட்டை வாங்க உள்ளார். அடா சர்மா பரபரப்பை கிளப்பி 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தவர், தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்தார், 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அடா சர்மா “பணிகள் நடந்து வருகிறது. எல்லாம் முழுமையான பிறகு நானே முறைப்படி அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.