ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் |

சென்னை : உலக பூமி தினத்தை முன்னிட்டு, 'நாம் விலங்குகளை போல நடந்து கொள்ள வேண்டும்' என, நடிகை அதா சர்மா கூறியுள்ளார்.
உலக பூமி தினமான நேற்று, 'ஈஷா' யோக மையத்தின், 'மண் காப்போம்' அமைப்பு சார்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஈஷா அமைப்பை சேர்ந்தவர்களுடன், நடன கலைஞர் கலா, நடிகர் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடிகை அதா சர்மா அறிக்கையில், 'காடுகளில் விலங்குகள் குப்பை போடுவதில்லை. மனிதர்கள் தான் குப்பையை கொட்டுகின்றனர். தயவு செய்து விலங்குகள் போல நடந்து கொள்ளுங்கள்' என, வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நடிகை தமன்னா விடுத்த அறிக்கையில், 'விலங்குகள் தங்கள் உணவை மண்ணிலிருந்து பெறுகின்றன. 'ஆனால், நம் மண் இறந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பறவைகள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படும். இந்த பூமி தினத்தில், மண்ணை அழியாமல் காப்போம் என உறுதிமொழி எடுப்போம்' என்று கூறியுள்ளார்.