'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
சென்னை : படம் தயாரிப்பு தொடர்பாக நடிகர் விமல் 1.50 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறி சிங்கார வடிவேலன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கார வடிவேலன், 45; பட வினியோகஸ்தர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: நான், 'மெரினா பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை வினியோகம் செய்து வருகிறேன். நடிகர் விமல், 2016ல் அறிமுகமானார். இவர் நடித்த இஷ்டம், புலி வால், மாப்பிள்ளை சிங்கம் என பல படங்கள் தோல்வியடைந்தன. இதனால், 'மார்க்கெட்' இழந்தார். அப்போது, திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் வாயிலாக, மன்னர் வகையறா என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி செய்யுமாறும், விமல் கூறினார். என் நண்பரும், தயாரிப்பாளருமான கோபியிடம், 5 கோடி ரூபாய் வாங்கி கொடுத்தேன்.
![]() |