சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவரான நடிகை அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கதக், சல்சா, ஜாஸ், பாலே நடனங்களில் தேர்ந்தவரான அடா சர்மா 2008ல் வெளிவந்த '1920' ஹிந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து வெளிவந்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெலுங்கு, கன்னடப் படங்களில் அறிமுகமானார்.
தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“க்ஷனம்' படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆனதால், தெலுங்கில் 5 படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளேன் என்பதைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். எந்த மொழியிலும் நான் ஏதாவது பரீட்சார்த்த முயற்சியில் செய்யும் போது எனக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்கிறீர்கள். தற்போது நான் நடித்து வரும் படங்கள் முந்தையப் படங்களில் இல்லாத ஒன்றாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழ் நடிகைக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை வழங்கு நம் இயக்குனர்கள் முன் வரவில்லை. ஆனால், அவரோ தெலுங்கில் ஒரே சமயத்தில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.