மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் ஆகியோர் படங்களில் நடித்தவர் நடிகை கிரண். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்த போதே காணாமல் போனார். இப்போது சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களிடையே கலந்து உரையாடி வருகிறார்.
தற்போது கிரண் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஏற்பட்ட சரிவு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் ஒருவரை ரொம்ப காதலித்தேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் நான் மனம் உடைந்து போனேன். அதன் பிறகு படங்களில் சில காலம் நான் நடிக்காமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வி தான் காரணம். ஒருவேளை அப்போது தெளிவாக இருந்திருந்தால் நல்ல இடத்துக்கு சென்று இருப்பேன். ஆனால், தவறான முடிவு எடுத்து என் வாழ்க்கை நாசமானது. இப்போது மீண்டும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் , யாரும் அழைக்கவில்லை. நான் நடித்த 5 படங்கள் தொடர் வெற்றியைத் அடைந்தது. இப்போது புதிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் .