‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவில், என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்னம், புலிமூட்டை ராமசாமி, கே.ஆர்.ராமச்சந்திரன் என பல காமெடி நடிகர்கள் இருந்த காதலத்தில் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர காமெடி நடிகர்கள் என்று யாரும் இல்லை. அங்கு பெரும்பாலும் புராண கதைகளை சினிமா ஆனதால் கமெடி நடிகர்கள் தனியாக தேவைப்படவில்லை.
என்றாலும் தெலுங்கு சினிமாவின் முதல் நட்சத்திர காமெடி நடிகராக கொண்டாடப்படுகிறவர் கே.சிவராவ் என்கிற கஸ்தூரி சிவராவ். மவுன படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் படக் கருவி ஆப்ரேட்டராகவும், கதை சொல்லியாகவும் இருந்தவர் சிவராவ். 'சிவராவ் வர்ணனை செய்யும் படம்' என்றே படத்திற்கு விளம்பரமும் செய்தார்கள்.
சினிமா பேசத் தொடங்கிய பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்த சிவராவ், 1945ம் ஆண்டு வெளியான 'சூடாமணி' என்ற படத்தின் மூலம் பிரபலமானார். 1949 இல் 'குணசுந்தரி கதா' திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகரானார், அதில் அவர் ஒரு சபிக்கப்பட்ட இளவரசராக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அவருடைய பாவனைகளும் வசனங்களும் மிகவும் பிரபலமடைந்ததால் மக்கள் அதே தொனியில் பேசத் தொடங்கினர். சிவராவ் பிற்காலத்தில் தயாராரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாறினார்.




