ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் |
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கிய ‛ஜெய்பீம்' படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு நடிகர் நானி, ‛ஜெய் பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜெய் பீம் என்ற ஹேஷ்டாக் போட்டு மனசு உடைஞ்சது போன்ற இமோஜியை பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுசீந்திரனும் அது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தேசிய விருது வென்ற படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. மிகவும் அற்புதமான படம். இயக்குனர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு கருவறை என்ற குறும்படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். இந்த வரிசையில் ஜெய்பீம் படம் மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த படத்திற்கு விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.