நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சுசீந்திரன், யூ டியூப்பில் ரிவ்யூ சொல்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ''சமீபத்தில் வெளியான 'டி.என்.ஏ, மார்கன்' படங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல ரிவ்யூ வரவில்லை. ஆனால் நான் தியேட்டரில் சென்று பார்த்தபோது படம் நன்றாக இருந்தது. சில நாட்களில் படம் பிக்அப் ஆனது. இப்போது சில யூடியூப்பர்கள் தங்கள் வியூஸ், விளம்பர வருமானத்துக்காக தவறான ரிவ்யூ கொடுக்கிறார்கள். சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை கொலை செய்கிறார்கள்.
இப்போது ஏகப்பட்ட டீம் வந்துவிட்டது. ஒரு டீம், சார் படத்துக்கு நாமே டிக்கெட் எடுத்து கொடுத்து 100 பேரை அனுப்புவோம். அவங்க வெளியே வரும் போது படம் ஆஹா ஓஹோ என்பார்கள் என ஐடியா கொடுக்கிறார்கள்.. மற்றொரு டீம், தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிட்டு படத்தை பற்றி தவறாக சொல்ல சொல்கிறார்கள்'' என்றார்.
இப்போது யூ டியூப் விமர்சகர்கள் மீது தமிழ் சினிமாவில் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. விமர்சனம் செய்ய கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடுத்தது. ஆனால் கோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. இதனால் போலியாக ஒரு படத்தை பற்றி ஆஹா ஓஹோ என சொல்லவோ, மட்டம் தட்டி பேசுவது போன்றோ விமர்சனம் செய்வோரை தடுக்க முடியாது, கட்டுப்படுத்தலாம் என சிலர் யோசனை தெரிவிக்கின்றனர்.