300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள கிங் ஆப் கொத்தா என்கிற திரைப்படம் பான் இந்திய ரிலீஸ் ஆக நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் வில்லனாக சார்பட்டா பரம்பரை புகழ் டான்சிங் ரோஸ் சபீர் கல்லரக்கல், நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ், நடிகர் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சபீர் கல்லரக்கல் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி இருவரும் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது சபீர் கல்லரக்கல் முதன் முதலாக துல்கர் சல்மானை சந்தித்தபோது தான் ஒரு நட்சத்திர நடிகர் என்றோ பெரிய குடும்பத்து வாரிசு என்றோ ஒரு துளி கூட காட்டிக் கொள்ளவில்லை. பார்த்த உடனேயே கதை பற்றி பேச ஆரம்பித்த அவர் இப்படி ஒரு வசனம் உங்களுக்கு இருக்கிறது சரியாக வருமா, நான் இப்படி பேச போகிறேன், இது உங்களுக்கு செட் ஆகுமா என ஒரு சக நடிகராகவே பேச ஆரம்பித்து விட்டார். முதல் நாளில் இருந்தே அவருடன் ஈசியாக என்னால் பயணிக்க முடிந்தது என்று கூறினார்.
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியும் துல்கர் சல்மானின் இந்த எளிமையை வியந்து பாராட்டியதுடன் பேசாமல் இனிமேல் அவருக்கு துல்கர் ஈஸி சல்மான் என பெயர் வைத்து விடலாம் என்று ஜாலியாக குறிப்பிட்டார்.