மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை மற்றும் பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவ்வப்போது சில புகார்கள் வெளியாவது உண்டு. இதுபோன்ற நிகழ்வுகள் பல பிரபலங்களுக்கும் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. இதுகுறித்து அவர்கள் தங்கள் விமர்சனங்களையும், கண்டனங்களையும், எச்சரிக்கையையும் தெரிவிக்கவும் தவறுவதில்லை. அந்த வகையில் இது போன்ற ஒரு மோசமான அனுபவத்தை சென்னை விமான நிலையத்தில் எதிர்கொண்டிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ஷங்கரின் பாய்ஸ் மற்றும் துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி கே.சந்திரன். சமீபத்தில் வெளியூர் சென்று விட்டு சென்னை விமான நிலையம் திரும்பிய போது இவரது உடைமைகள் லக்கேஜ் பிரிவிலிருந்து இவரது கைகளுக்கு வந்து சேர்வதற்கு நீண்ட நேரம் ஆனது. இது குறித்து அவருக்கு சரியான பதில் அளிக்கவும் அங்கு யாரும் தயாராக இல்லை.. “என்னுடைய 49 வருட பயண அனுபவத்தில் இதுபோன்று ஒரு மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதில்லை” என்று விரக்தியாக கூறியுள்ளார் ரவி கே.சந்திரன்.