இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக அக்ஷிதா அசோக் இணைந்துள்ளதாகவும் புகைப்படங்களுடன் செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து ரித்திகா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில், பாக்கியலெட்சுமி தொடரின் ஹீரோவான கோபி அதாவது நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை ரித்திகாவுடன் கற்பூரத்தை தொட்டு கும்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து ரித்திகா விலகியது உண்மை தான் என்றும், அவருக்கு பேர்வெல் கொடுத்து தான் இந்த பதிவை சதீஷ் வெளியிட்டுள்ளார் என்றும் சின்னத்திரை வட்டாரங்களில் பலரும் பேசி வருகின்றனர்.