நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிவிட்டார் நடிகர் சதீஷ். பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் சதீஷுக்கு பாக்கியலெட்சுமி தொடரின் கோபி கதாபாத்திரம் தான் அதிக புகழை பெற்று தந்தது. இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வரும் சதீஷ் அவ்வப்போது எதாவது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'மீண்டும் நான் ரொம்ப நாட்கள் கோபி கேரக்டரில் தொடர்வேனா என்று தெரியாது. கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாரித்து வீட்டிற்கு கொண்டு வருவதற்குள் போதுமென்றாகி விடுகிறது. நாம் நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டரே இதுதான் என்று பலரும் அசிங்கமாக திட்டுகின்றனர். பல அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. என் ஜாதிக்காரர்கள் பலரும் இதை அனுபவிக்கின்றனர். நான் ஜாதிக்காரர்கள் என்று சொன்னது என்னை போன்ற நடிகர்களை தான். இப்போது புரிகிறதா? நான் ஏன் அடிக்கடி இண்ஸ்டாகிராமை டி-ஆக்டிவேட் செய்கிறேன் என்று?' என தன் வருத்தங்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.