சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிவிட்டார் நடிகர் சதீஷ். பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் சதீஷுக்கு பாக்கியலெட்சுமி தொடரின் கோபி கதாபாத்திரம் தான் அதிக புகழை பெற்று தந்தது. இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வரும் சதீஷ் அவ்வப்போது எதாவது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'மீண்டும் நான் ரொம்ப நாட்கள் கோபி கேரக்டரில் தொடர்வேனா என்று தெரியாது. கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாரித்து வீட்டிற்கு கொண்டு வருவதற்குள் போதுமென்றாகி விடுகிறது. நாம் நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டரே இதுதான் என்று பலரும் அசிங்கமாக திட்டுகின்றனர். பல அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. என் ஜாதிக்காரர்கள் பலரும் இதை அனுபவிக்கின்றனர். நான் ஜாதிக்காரர்கள் என்று சொன்னது என்னை போன்ற நடிகர்களை தான். இப்போது புரிகிறதா? நான் ஏன் அடிக்கடி இண்ஸ்டாகிராமை டி-ஆக்டிவேட் செய்கிறேன் என்று?' என தன் வருத்தங்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.




