மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கோயில் திருவிழாக்களில் வேஷம் கட்டி ஆடும் தெருக்கூத்து கலைஞரான தாமரைச் செல்விக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி புதியதொரு முகத்தை கொடுத்தது. பிக்பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிரடியாக அசத்திய தாமரைக்கு மக்களின் சப்போர்ட்டும் நிறையவே கிடைத்தது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் குணச்சித்திர நடிகையாக சினிமா மற்றும் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். தனது குடும்ப வறுமை காரணமாக தெருக்கூத்து கலைஞராக பல கஷ்டங்களை சந்தித்த தாமரை தற்போது கைநிறைய சம்பாதித்து தன் குடும்பத்தாரை மகிழ்ச்சியாக வைத்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை ஏ.மாத்தூரில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்வு இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொண்ட தாமரை, வரவேற்பு பத்திரிகையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாமரையின் வளர்ச்சியை பாராட்டியும் அவர் மேன்மேலும் வளரவும் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.