மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் ரஜினி இமயமலை ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷை சந்தித்து பேசினார். கவர்னர் ஆனந்திபென் படேலையும் சந்தித்தார். பின்னர் அயோத்திக்கு சென்ற அவர் அனுமன்கர்கி கோயிலுக்கு சென்று வழிபட்டார். ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
இந்தநிலையில் லக்னோ ராணுவ தலைமையத்திற்கு ரஜினியை அழைத்து சென்று ராணுவ அதிகாரிகள் கவுரவித்தனர். இந்திய ராணுவத்தின் முதன்மை கமாண்டிங் அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகளுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.