புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் ரஜினிகாந்த் எப்படி சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்து வந்தாரோ, அதே போல தெலுங்கில் மெகா ஸ்டார் ஆக உயர்ந்து வந்தவர் சிரஞ்சீவி. இருவரது வளர்ச்சியும் ஒரே கால கட்டத்தில்தான் அமைந்தது. இருப்பினும் வசூல் விஷயத்தில் சிரஞ்சீவியை எப்போதுமே மிஞ்சுபவர் ரஜினிகாந்த்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அது தொடர்கிறது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளிவந்து அது தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்கு மட்டும் இதுவரையிலும் சுமார் 70 கோடி வரை வசூலித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்தப் படம் இதுவரையிலும் 35 கோடி ரூபாயை பங்குத் தொகையாகக் கொடுத்து இரு மடங்கு லாபத்தைத் தந்துள்ளது.
அதே சமயம் சிரஞ்சீவி நடித்து ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவந்த 'போலா ஷங்கர்' படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்தப் படத்தின் உலக அளவிலான மொத்த வசூலே 45 கோடியைத் தாண்டவில்லையாம். உலக அளவில் சுமார் 80 கோடிக்கு விற்பனையான இப்படம் மூலம் 50 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.
அடுத்தடுத்து நஷ்டங்களை சந்தித்த போதும் சிரஞ்சீவி தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படமான 157 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'பிம்பிசாரா' படத்தை இயக்கிய வசிஷ்டா அந்தப் படத்தை இயக்க உள்ளார்.