பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சைரன் படத்தை அடுத்து தற்போது சீனி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன்-2 படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 33வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் ரொமான்டிக் கதையில் உருவாகிறது.