மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சைரன் படத்தை அடுத்து தற்போது சீனி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன்-2 படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 33வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் ரொமான்டிக் கதையில் உருவாகிறது.