மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ராக்கி, சாணி காகிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகிறது.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.