இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலையொட்டி வெளியானது. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம், ஒட்டு மொத்தமாக ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக கேரளாவில் 13 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கேரளாவில் இந்த படத்தை விநியோகம் செய்த ராய் அகஸ்டின் என்பவர், தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், படத்துக்கு தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்றுத் தருமாறு, நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளார். இதுமட்டுமல்லாது, தான் கொடுத்த பணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.