ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கேடி பில்லா கில்லாடி ரங்கா,மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா காஸண்ட்ரா. இது அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதன்படி, 'தனக்கு பட வாய்ப்புகள் இன்றி பெரிதாக நடிக்காமல் இருந்த காலகட்டத்தில் சிலரிடம் வாய்ப்புகள் கேட்டேன். அப்போது ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருந்தால் உடனே வாய்ப்பு கிடைக்கும் என்றார். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது தான் அதனால் எனக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. அதன் பிறகு என் மேனேஜரிடம் தான் கேட்டு தெரிந்துகொண்டேன். ஆனால், அதன்பிறகு இதுபோன்ற சம்பவங்களை நான் எதிர்கொள்ளவில்லை' என மனம் திறந்து தெரிவித்துள்ளார்.




