நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் சலார். பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிகர் பிரித்விராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் பாகத்திற்காக விடுபட்ட சில காட்சிகளுக்கான படப்பிடிப்பை சமீபத்தில் நடத்தினார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
மங்களூரில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலே தான் காந்தாரா இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை அடுத்து சலார் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் விசிட் அடித்த ரிஷப் ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீலை சந்தித்து சில மணி நேரங்கள் சலார் பற்றியும் தனது அடுத்த படம் பற்றியும் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்றார்.