சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் சலார். பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிகர் பிரித்விராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் பாகத்திற்காக விடுபட்ட சில காட்சிகளுக்கான படப்பிடிப்பை சமீபத்தில் நடத்தினார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
மங்களூரில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலே தான் காந்தாரா இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை அடுத்து சலார் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் விசிட் அடித்த ரிஷப் ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீலை சந்தித்து சில மணி நேரங்கள் சலார் பற்றியும் தனது அடுத்த படம் பற்றியும் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்றார்.