ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் சூர்யாவிற்கு கடந்த 10 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு பெயரை பெற்று தந்தன. அதுவும் ஓடிடியில் தான் வெளியானது. மற்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது சிவா இயக்கத்தில் ' கங்குவா' படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பு விழாவில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, ‛‛ரசிகர்களிடம் தனது அடுத்த அடுத்த படங்களின் அப்டேட் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, கங்குவா படம் நாம் நினைத்தது விட 100 மடங்கு நன்றாக வந்துள்ளது. சூர்யா 43வது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. மேலும், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விடுதலை இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்கு பிறகு துவங்கும் . இது அல்லாமல் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக உருவாக்க லோகேஷ் கதை ஒன்றை கூறியுள்ளார். விரைவில் அது படமாகும். இதற்கு பிறகுதான் இரும்பு கை மாயாவி லோகேஷ் இயக்கத்தில் உருவாகும்" என தனது அடுத்த பட அப்டேட்களை கூறி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் சூர்யா .