லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'பிளாக் டிக்கெட்' நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஐஸ்வர்யா தற்போது தனியாக 'மசாலா பாப்பார்ன்' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். ஒயிட் பெதர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. 'மீசைய முறுக்கு' படத்தில் அறிமுகமான ஆனந்த் இயக்கி, நடித்துள்ளார். அவருடன் பவானி ஸ்ரீ, இர்பான், குமரவேல், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து இயக்குனர் ஆனந்த் கூறியதாவது: படம் சென்னையின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு இருந்தாலும் இதன் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வாழ்க்கையையும் நட்பையும் கொண்டாடும் வகையில் உணர்வுப்பூர்வமாக வந்துள்ளது. என்றார்.
படத்தை வெளியிடும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது: ‛சென்னை 28' படத்தின் நினைவுகளுக்கு என்னை அழைத்து சென்ற இந்தப் படத்தை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. சிறந்த கனவுகளுடன், இந்த அற்புதமான சினிமாவில் முத்திரை பதிக்க கடுமையாக முயற்சிக்கும் இந்த இளம் திறமைகளை பார்க்கும் போது எங்களையே மீண்டும் பார்ப்பது போல உள்ளது. இந்த படம் ரசிகர்களின் நண்பர்களைப் பற்றிய கதையாகவோ அல்லது உங்களைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். விரைவில் நாங்கள் அதை உங்களிடம் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாட்களை மீட்டுத் தருவோம். நண்பர்களுக்காக நண்பர்கள் சேர்ந்து செய்த படம் இது. என்கிறார் வெங்கட் பிரபு.