மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர் மனைவி ஒருவரிடம் 200 கோடி மோசடி செய்ததாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் அவருக்கு பிரபல பாலியுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடந்தையாக இருந்தார் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் ஜாக்குலின் தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தனது நிதி பிரச்சினை சீராகும் என்றும், அதனால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் ஒரு கோடி ரூபாய் பிணையத் தொகை செலுத்தி விட்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.