'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது காலை சிறப்புக் காட்சிகள், அதிகாலை சிறப்புக் காட்சிகள், நடுஇரவுக் காட்சிகள் என நடந்தது. ஆனால், இந்த வருடப் பொங்கலுக்கு வெளியான 'வாரிசு, துணிவு' ஆகிய படங்களுக்கு அரசிடம் அனுமதி பெறாமல் அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதன்பின் வெளியான படங்களுக்கு அதிகாலை காட்சிகளை நடத்த அனுமதி வழங்கவில்லை. காலை 8 மணி அல்லது 9 மணிக்கே காட்சிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் இப்படியான அதிகாலை காட்சிகளை பரபரப்பாக்கியவர்களில் ரஜினிகாந்த் முதன்மையானவர். அவருடைய படங்களை முதல் காட்சியில் பார்ப்பதற்கு பலரும் விரும்புவார்கள். இந்நிலையில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்படாத காரணத்தால் ஆகஸ்ட் 10 வெளியாகும் 'ஜெயிலர்' படத்திற்கான காட்சிகள் காலை 9 மணிக்குதான் ஆரம்பமாகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை. அதே சமயம் பெங்களூருவில் காலை 6 மணிக்கும், ஐதராபாத்தில் காலை 8 மணிக்கும், கேரளாவில் காலை 6 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு இது கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 10ம் தேதி தமிழில் வேறு எந்தப் படங்களும் வரவில்லை. 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் தவிர மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், என மற்ற மொழி நடிகர்களும் உள்ளதால் தென்னிந்திய அளவில் நல்ல முன்பதிவு இருந்து வருகிறது. முதல் நான்கு நாட்களுக்கு பெரும்பாலான காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது முந்தைய படங்களின் ஓபனிங் வசூலை இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.