பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் | கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் தப்பிய விஜய் தேவரகொண்டா |
கொரோனா பாதிப்பால் ஓடிடி தளங்களுக்கான வரவேற்பு அதிகமானது. லாக் டவுன் போட்ட போது, தியேட்டர்கள் மூடப்பட்டதால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு ஓடிடி தளங்களே என்டர்டெயின்மென்ட் ஆக அமைந்தது. தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களையும் அவர்கள் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். அதன்பின் ஒரு மொழியில் எடுக்கப்படும் படங்கள் ஓடிடி தளங்களில் மட்டும் பல பிராந்திய மொழிகளில் வெளியிட ஆரம்பித்தனர்.
அதன் காரணமாக ஒரு மொழியில் வெற்றிகரமாக ஓடிய படங்களை வேறு மொழிகளில் ரீமேக் செய்து மிகவும் குறைந்து போனது. இந்நிலையில் தமிழில் 2015ல் வெளிவந்து வெற்றி பெற்ற 'வேதாளம்' படத்தை எட்டு வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் 'போலா சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்து ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடுகிறார்கள். இந்தக் காலத்தில் இப்படி ஒரு ரீமேக் படத்தில் நடித்ததன் காரணம் என்ன என்பதை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரஞ்சீவி விளக்கியுள்ளார்.
“ரீமேக்கில் நடிப்பது பற்றி விவாதித்தோம். ஒரு படத்தின் கன்டென்ட் ஸ்ட்ராங் ஆக இருந்தால் ரீமேக்கில் நடிப்பதில் தவறில்லை. 'வேதாளம்' படத்தின் கன்டென்ட்டை தெலுங்கு ரசிகர்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். பல படங்கள் ஓடிடி தளங்களில் உள்ளன. ஆனால், 'வேதாளம்' படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் இல்லை. பல ரசிகர்கள் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. எனவேதான் 'வேதாளம்' ரீமேக்கில் நடித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.